மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள சீரற்ற வானிலை காரணமாக மட்டக்களப்பு மாநகர சபையில் கடமையாற்றும் பதவிநிலை உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட ஊழியர்கள் அனைவரினதும் விடுமுறைகள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக மாநகர சபையின் முதல்வர் தி.சரவணபவன் அறிவித்துள்ளார்.
மட்டக்களப்பு மாநகர சபையின் அபாயக் குறைப்பு முன் ஆயத்த குழு எந்நேரமும் கடமையில் இருக்க வேண்டுமெனவும் அறிவுறுத்தியுள்ளார்.
வெள்ள நீர வடிந்தோட முடியாத வகையில் வடிகாண்களை அடைத்து வைத்துள்ளவர்களுக்கு எதிராகக் கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் மட்டக்களப்பு மாநகர முதல்வர் தெரிவித்துள்ளார்.