துணுக்காய் பிரதேச செயலகப்பிரிவிற்குட்பட்ட வவுனிக்குள நீர்ப்பாசன பிரிவில் அமைந்துள்ள தேறாங்கண்டல் குளத்தின் துறுசுப்பகுதியில் நீர்க்கசிவு ஏற்பட்டுள்ளது.
இதனை அவதானித்த மக்கள், குளப்பராமறிப்பாளர் மற்றும் விவசாயிகள் உடனடியாக அப்பகுதி விவசாய சமுர்த்தி உத்தியோகத்தர்கள், இராணுவம், சிவில் பாதுகாப்பு ஊழியர்களுடன் இணைந்து நீர்க்கசிவை சீர்செய்துள்ளனர்.
இருந்தும் தொடர்மழை பெய்வதால் அவதானத்துடன் இருக்குமாறு மக்கள் அறிவுறுத்தப்படுகின்றனர்.