ஐக்கிய நாடுகள் பொதுச் செயலாளர் பதவிக்கு ரணில் விக்ரமசிங்க பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்ற தகவல்கள் உண்மையில்லை இல்லை என ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஜோன் அமரதுங்க தெரிவித்துள்ளார்.
ஐ.நா. பொதுச் சபையின் அடுத்த அமர்வில் புதிய பொதுச் செயலாளர் பதவிக்கு ரணில் விக்கிரமசிங்கவின் பெயர் முன்மொழியப்படும் எனவும் அதற்கான முன்மொழிவு தொடர்பில் தற்போது பரிசீலனை செய்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
ஐ.நா. பொதுச் செயலாளர் பதவியை ஏற்க வேண்டும் என்பது அவரது தனிப்பட்ட பார்வையாகும். சர்வதேச அங்கீகாரமும் அதிகாரமும் உள்ள இந்தப் பதவி வாய்ப்பு இலங்கைக்கு கிடைப்பது பெரும் பாக்கியமாகும் என்றும் பாராளுமன்ற உறுப்பினர் ஜோன் அமரதுங்க குறிப்பிட்டுள்ளார்.