வட மாகாணத்துக்கு இன்னும் ஆளுநர் ஒருவரை நியமிப்பதற்கு அரசாங்கம் இழுத்தடிப்பதனால், பெரும்பாலான தீர்மானங்களை எடுப்பதற்கு முடியாத ஒரு நிலைமை உருவாகியுள்ளதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ஆர்.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
தான் இது தொடர்பில் பல்வேறு தடவைகள் அரசாங்கத்தை நினைவுபடுத்தியதாகவும், வேறு மாகாணங்களுக்கு ஆளுநர்களை நியமிப்பதற்கு அரசாங்கத்துக்குள்ள ஆர்வம் வட மாகாண விடயத்தில் காணப்படாதுள்ளதாகவும் அவர் விசனம் தெரிவித்துள்ளார்.
இதுவரையில் வட மாகாணத்துக்கு ஆளுநர் ஒருவர் நியமிக்கப்படாமையினால், வருட இறுதியில் வழங்கப்படவுள்ள இடமாற்றங்கள், மாகாணத்தின் கீழ் இயங்கும் நிறுவனங்கள் என்பன செயற்பட முடியாத துர்ப்பாக்கிய நிலைமை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாக இன்றைய சகோதர ஊடகமொன்று சுட்டிக்காட்டியுள்ளது.