மட்டக்களப்பு மண்முனைப்பற்று காங்கேயனோடை பிரதேசத்தைச் சேர்ந்த உவைஸ் பாத்திமா ஜப்றாவுக்கு எனும் 14 வயதுடைய பெண்ணிற்கு மருந்தின் அளவை மாற்றி கொடுத்தமையின் காரணமாக உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கடந்த வருடம் திடீரென ஏற்பட்ட புற்று நோய்த்தாக்கத்துள்ளான ஜப்றா மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் புற்று நோய் சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்தார்.
மாதாந்தம் 2 மில்லி மருந்தே தொடர்ந்து வழங்கப்பட்டு வந்துள்ள நிலையில் கடந்த வாரம் செவ்வாய்க்கிழமை 20 மில்லி மருந்து வழங்கப்பட்டதன் காரணமாக குறித்த பெண் கவலைக்கிடமான நிலையில் கண்டி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு இரத்த மாற்று சிகிச்சை செய்யப்பட்டது,
பின்னர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டு வரப்பட்டு அதி தீவிர சிகிச்சைப் பிரிவில் வைக்கப்பட்டு உயிரைக் காப்பாற்ற போராடினாலும் மாணவியின் உயிரைக் காப்பாற்ற முடிய வில்லை.
இவ்வாறாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் கவனயீனம் காரணமாக அடிக்கடி மரண சம்பவங்கள் இடம்பெற்று வருகின்றமை மக்கள் மத்தியில் மிகப் பெரும் கவலையை ஏற்படுத்தி நிற்கின்றது.