சுனாமிப் பேரலையால் உயிரிழந்த உறவுகளின் 15ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு தமிழர் தாயாகம் எங்கும் உறவுகளால் இன்று கடைப்பிடிக்கப்பட்டது.
வடமராட்சி கிழக்கு உடுத்துறை சுனாமி நினைவாலயத்தில் ஆழிப் பேரலையால் உயிரிழந்தவர்களுக்கு உறவுகள் மலர் தூவி, தீபம் ஏற்றி அஞ்சலித்தனர்.
இன்று காலை 9.35 மணியளவில் இந்த நிகழ்வு உணர்வுபூர்வமாக இடம்பெற்றது.