வவுனியா லயன்ஸ் விளையாட்டு கழகத்தினரால் சுனாமி நினைவு தின நிகழ்வு

20191226 093431
20191226 093431

வவுனியா பூந்தோட்டம் லயன்ஸ் விளையாட்டுகழக மைதான வளாகத்தில் அமைந்துள்ள சுனாமி நினைவுத் தூபியில் இன்று சுனாமி நினைவு தின நிகழ்வு இடம்பெற்றுள்ளது.

வவுனியா, பூந்தோட்டம் நரசிங்கர் ஆலயம் மற்றும் வவுனியா நகரசபையின் ஏற்பாட்டில் இந்நினைவு தினம் இடம்பெற்றுள்ளது.

இதன்போது உயிரிழந்தவர்களுக்கு இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டதுடன், மலரஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.

இந்நிகழ்வில் மதகுருமார்கள், நாடாளுமன்ற உறுப்பினர்களான சிவசக்தி ஆனந்தன், காதர் மஸ்தான், நகரசபை தவிசாளர் இ.கௌதமன், மாகாணசபை முன்னாள் உறுப்பினர் செ.மயூரன், நகரசபை உறுப்பினர்கள், நரசிங்கர்ஆலயத்தின் தலைவர் தேவராசா, பொது அமைப்புகள், சமூக ஆர்வலர்கள், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.