பிரபல பொலிவூட் நடிகை ஐஸ்வர்யா ராய்க்கு இந்திய சட்ட அமுலாக்கத்துறை அழைப்பாணை அனுப்பியுள்ளது.
கடந்த 2016 ஆம் ஆண்டு சட்டவிரோதமாக வெளிநாடுகளில் சொத்துக்களை வாங்கியவர்கள் தொடர்பில் பனாமா என்ற ஆவணம் பெயர் பட்டியலொன்று வெளியானது.
இந்தப் பட்டியலில் உலகம் முழுவதும் உள்ள பல்வேறு துறை சார்ந்த பிரபலங்களின் பெயர்களும் இடம்பெற்றிருந்தன. அதில் இந்தியாவைச் சேர்ந்த நடிகை ஐஸ்வர்யா ராய், அமிதாப் பச்சன் உள்ளிட்ட பல பிரபலங்களின் பெயர்களும் உள்ளடங்கியிருந்தன.
இந்த ஆவணத்தில் உள்ள தகவல்களின் அடிப்படையில் இந்திய சட்ட அமுலாக்கத்துறை விசாரணைகளை மேற்கொண்டுள்ளது.
இவ்விவகாரத்தில் ஐஸ்வர்யா ராய் மற்றும் அமிதாப் பச்சன் ஆகிய இருவரும் விளக்கமளிக்க வேண்டும் என அமுலாக்கத்துறை அழைப்பாணை அனுப்பியிருந்த நிலையில், தற்போது நடிகை ஐஸ்வர்யா ராய் விசாரணைக்காக இன்று (20) அமுலாக்கத்துறை அலுவலகத்தில் முன்னிலையாகியுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.