பிக்பொஸ் 2வது சீசனில் வீட்டிற்குள் முதல் போட்டியாளராக களமிறங்கியவர் நடிகை யாஷிகா.
அப்போது அவர் சில படங்கள் மட்டுமே நடித்தார், அதிலே அவர் கொஞ்சம் பிரபலம் ஆனார். பின் பிக்பொஸ் வந்த அவருக்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்தது, முதலில் விளையாட்டில் அக்கறை காட்டிய அவரது டிராக் நாட்கள் செல்ல செல்ல வேறு விஷயங்களில் சென்றது.
அது 2வது சீசன் முழுவதும் பார்த்தவர்களுக்கு தெரியும். சில மாதங்களுக்கு முன்பு அவர் பயங்கர விபத்தில் சிக்கி பெரிய பிரச்சனையில் மாட்டினார்.
தற்போது அதில் இருந்து வெளியே வந்துகொண்டிருக்கும் யாஷிகா படங்கள் அதிகம் கமிட்டாகி வருகிறார்.
இந்த நேரத்தில் இன்ஸ்டாவில் ரசிகர்களுடன் கலந்துரையாடிய அவரிடம், உங்களுக்கும், நிரூப்பிற்கும் எப்போது கல்யாணம் என ஒரு ரசிகர் கேட்டுள்ளார். அதற்கு அவர், நாங்கள் இருவரும் நல்ல நண்பர்கள் தான்.
இப்போதைக்கு யாருடனும் திருமணம் செய்யும் எண்ணம் எனக்கு இல்லை என பதில் கூறியுள்ளார்.