கல்லாறு பிரதேசத்தில் இடம்பெறும் சட்டவிரோத மணலகழ்வை தடுப்பதற்கு இராணுவ காவலரண் அமைக்குமாறு வலியுறுத்தி பெண்கள் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தனர்.
கிளிநொச்சி கண்டாவலை பிரதேச செயலகத்திற்குட்பட்ட கல்லாறு கிராமத்தில் நேற்றைய நாள் (10) குறித்த போராட்டம் இடம்பெற்றது.
இதன் போது வருகை தந்த இராணுவத்தினர் மக்களின் கோரிக்கையினை ஏற்றுக்கொண்டு குறித்த பிரதேசத்தில் இராணுவ காவலரண் அமைப்பதாக தெரிவித்தனர்.
கல்லாறு பிரதேசத்தில் வாழ்கின்ற பெண்களின் இவ் எடுத்துக்காட்டான செயற்பாட்டிற்கு வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டு வருவதுடன் இராணுவத்தினரின் மக்கள் நலன் கருதிய செயற்பாட்டிற்கும் நன்றி தெரிவித்து வருகின்றனர்.