இந்திய – அவுஸ்ரேலிய அணிகளுக்கிடையிலான முதலாவது ஒருநாள் போட்டியில் அவுஸ்ரேலிய அணி எதுவித விக்கட் இழப்பின்றி அபார வெற்றி பெற்றுள்ளது.
நாணய சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் களத்தடுப்பை தீர்மானித்த அவுஸ்ரேலிய அணி இந்திய அணியை முதலில் துடுப்பெடுத்தாட பணித்தது.
அந்த வகையில் முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 255 ஓட்டங்களுக்கு சகல விக்கட்டுக்களையும் இழந்தது.
இந்திய அணி சார்பில் ஷஹர் தவான் 74 ஓட்டங்களையும், ராகுல் 47 ஓட்டங்களையும், ரிஷாப் பன்ட் 28 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.
அவுஸ்ரேலிய பந்துவீச்சில் மிட்சல் ஸ்டார்க், பட் ஹம்மின்ஸ், ரிச்சர்ட்டசன் தலா இரண்டு விக்கட்டுக்களை விழ்த்தினர்.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய அவுஸ்ரேலிய அணி 37.4 ஓவர்களில் எதுவித விக்கட் இழப்புமின்றி அபார வெற்றி பெற்றது.
துடுப்பெடுத்தாட்டத்தில் டேவிட் வோர்னர் 128 ஒட்டங்களையும், ஆரோன் பின்ச் 110 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.
ஆட்டநாயகனாக டேவிட் வோர்னர் தெரிவு செய்யப்பட்டார்.
தொடரின் அடுத்த போட்டி எதிர்வரும் 17ம் திகதி நடைபெறவுள்ளது.