கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட இருவர் கைது

10  3
10 3

ஏழாலையில் கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்டு வந்த இரு சந்தேகநபர்களுடன் 70 லீற்றர் கசிப்பு பொலிஸாரால் நேற்று (25) கைப்பற்றபட்டுள்ளது.

அங்கு 70 லீற்றர் கசிப்பு, சுமார் ஆயிரம் லீற்றர் கோடா, வெற்றுத் தகரங்கள், கசிப்பு உற்பத்திக்குப் பயன்படுத்தப்படும் கம்பிகள் உள்ளிட்டவையும் கைப்பற்றப்பட்டன என்று பொலிஸார் தெரிவித்தனர்.
.
குறித்த சந்தேகநபர்கள் இருவரையும் இன்று
(25) மல்லாகம் நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பாக பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.