நோய்த் தடுப்பின் பின்னர் அது பற்றிய சான்றிதழ்!

02 1
02 1

வெளிநாடுகளிலிருந்து வருகை தரும் அனைவரும் நாட்டு மக்களின் பாதுகாப்பிற்காக இந்த நடவடிக்கைகளுக்கு உதவுமாறு ஜனாதிபதி கேட்டுக்கொண்டுள்ளார்.

நோய்த் தடுப்பின் பின்னர் அது பற்றிய சான்றிதழ் ஒன்றை வழங்கவும் கலந்துரையாடலின்போது தீர்மானிக்கப்பட்டது.

வேறு நாடுகளிலிருந்து வருவோர் வீடுகளிலிருந்து நோய்த் தடுப்பில் ஈடுபடுவதன் மூலம் இதற்கு பங்களிக்குமாறும் ஜனாதிபதி கேட்டுக்கொண்டார்.

குழுக்களாக வேறு நாடுகளுக்கு பயணங்களை மேற்கொள்வதை உடனடியாக நிறுத்துவது குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது.

பற்றாக்குறையின்றி மருந்து வகைகளை தயார்படுத்தி வைத்தல், பரிசோதனை நடவடிக்கைகளுக்கு தேவையான வசதிகளை முறைப்படுத்துமாறும் ஜனாதிபதி பணிப்புரை விடுத்தார்.