கொரோனா பாதிப்பு அரசை நம்பவேண்டாம் – தேரர்

1 thr
1 thr

கொரோனா வைரஸ் விவகாரத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான அரசாங்கம் மெத்தனமாக செயற்படுவதாக சிங்கள பௌத்த மக்களின் அதியுர் மதத் தலைமை பீடங்களில் ஒன்றான மல்வத்து பீடம் குற்றம்சாட்டியுள்ளது.

கொரோனா வைரஸ் இன்னமும் இலங்கையில் பாதிப்பினை ஏற்படுத்தவில்லை என்பதற்காக அரசாங்கம் மெத்தனப் போக்குடன் செயற்படக்கூடாது என வலியுறுத்தியுள்ள மல்வத்து பீடத்தின் துணை மகாநாயக்கர் திம்புல்கும்புரே விமலதம்ம தேரர், இவ்வாறான நடவடிக்கைகளால் கொரோனா வைரஸின் தாக்கம் மோசமடையலாம் என்றும் எச்சரித்துள்ளார்.

உலகில் பல்வேறு நாடுகள் விமானம் மற்றும் கப்பல் போக்குவரத்துக்களை தடை செய்துள்ள நிலையில் இலங்கையில் அவ்வாறான தடைகள் ஏதும் அமுல்படுத்தாது இருப்பது குறித்தும் தனது அதிருப்தியை துணை மகாநாயக்கர் திம்புல்கும்புரே விமலதர்ம தேரர் வெளிப்படுத்தியுள்ளார்.