உலகை பெரும் அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கி வரும் கொரோனா வைரஸானது விண்கல்லில் இருந்து வந்ததென்று தெரிவித்துள்ளார் இலங்கை பேராசிரியர் சந்திர விக்ரமசிங்க.
2019ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 11 ஆம் திகதி சீனாவின் வூஹான் அருகில் விண்கல் விழுந்து,அதன் மூலம் வைரஸ் பரவியுள்ளதாக அவர் கருத்து வெளியிட்டுள்ளார்.
ஆனாலும் அவரின் கருத்தை நோய்த்தொற்று வல்லுநர்கள் மறுத்து வருகின்றனர்.
எனினும் சீனாவில் விண்கல் விழுந்த வீடியோ ஆதாரங்களை வெளியிட்டுள்ள சந்திர விக்கிரமசிங்க, விண்கல்லின் மாதிரிகளை வைத்து தான் இதை நிரூபிக்க முடியுமெனவும் கூறியுள்ளார்.