மார்ச் 31 வரை இடைநிறுத்தப்பட்ட நடவடிக்கை!

80
80

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக சாரதி அனுமதிப்பத்திரம் வழங்கும் நடவடிக்கை எதிர்வரும் மார்ச் 31 ஆம் திகதி வரை இடைநிறுத்தப்படுவதாக மோட்டார் போக்குவரத்துத் திணைக்களம் அறிவித்துள்ளது.

அந்தவகையில் சாரதி அனுமதிப்பத்திரத்துக்கான மருத்துவச் சான்றிதழ் வழங்கல், பரீட்சை, வாகனம் செலுத்தும் செயல்முறைத் தேர்வு உள்ளிட்ட அனைத்து சேவைகளும் இவ்வாறு இடைநிறுத்தப்படுவதாக திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.