இலங்கையில் 13 வயதுச் சிறுமி உட்பட மேலும் 3 பேர் பாதிப்பு!

5 TTR
5 TTR

கொரோனா வைரஸினால் மேலும் 03 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் இலங்கையில் இதுவரை மொத்தமாக 21 பேர் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் தொடர்பில் தெளிவூட்டும் விஷேட ஊடக சந்திப்பொன்று தற்போது அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்று வருகின்றது.

இதில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், விஷேட வைத்திய அதிகாரி அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.

13 வயதுச் சிறுமி, 34 வயதுடைய ஆண் மற்றும் 50 வயதுடையவர்கள் இவ்வாறு கொரோனா வைரஸ் தொற்றுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.