‘விடுதலைப்புலிகள் மக்கள் பேரவை’ சுயேட்சையாக போட்டியிட தீர்மானம்

w 3
w 3

தமிழ் தேசிய கூட்டமைப்பு முன்னாள் போராளிகளுக்கு சரியான ஆசன ஒதுக்கீட்டை வழங்காத நிலையில் ‘விடுதலைப்புலிகள் மக்கள் பேரவை’ எனும் சுயேட்சைக் குழு சார்பில் முன்னாள் போராளிகள் வடக்கு-கிழக்கில் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட உள்ளதாக வடமாகாண முன்னாள் அமைச்சர் பா.டெனிஸ்வரன் தெரிவித்தார்.

மன்னாரில் இன்று திங்கட்கிழமை மதியம் இடம் பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் அவ்வாறு தெரிவித்தார்.

நாட்டில் மக்கள் அனைவரும் கொரோனா வைரசின் பாதீப்பினால் அச்சமடைந்துள்ளனர். இச் சூழ்நிலையில் நாடாளுமன்ற தேர்தலுக்கு இந்த நாடு முகம் கொடுக்க உள்ளது.

இத்தேர்தல் பிற்போடப்பட வேண்டும் என்பதே எனது கருத்து.

எமது நாட்டடில் இந்த நோய் அதிகரிக்குமாக இருந்தால் உண்மையில் எமது நாடு சுடுகாடாக மாறிவிடும்.எனவே இந்த வைரசினை கட்டுப்படுத்த அரசு நடவடிக்கைகளை துரிதப்படுத்த வேண்டும்.

‘விடுதலைப்புலிகள் மக்கள் பேரவை’ என்கின்ற கட்சி ஊடாக எதிர் வரும் பாராளுமன்ற தேர்தலில் நான் போட்டியிட உள்ளேன்.

கடந்த வாரம் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் தலைவர், மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அவசர கோரிக்கை ஒன்றை முன் வைத்திருந்தேன்.

தமிழ் தேசியக்கூட்டமைப்பை உறுவாக்கியது எமது தேசிய தலைவர்.தேசிய தலைவரின் வளர்ப்பில் வளர்ந்த முன்னாள் போராளிகள், புனர்வாழ்வு அழிக்கப்பட்ட போராளிகள் , மாவீரர் குடும்பங்களில் இருக்கின்றவர்கள், எமது இனத்தின் விடுதலைக்காக போராடிய போராளிகள்,பெண் போhளிகள் உற்பட பலர் இருக்கின்றார்கள்.

அவர்களை ஆரம்ப காலத்தில் தேர்தலில், ஜனநாயக நீரோட்டல் இணைப்பது என்பது மிகவும் கடினமாக இருந்தது.தமிழ் தேசியக்கூட்டமைப்பின் பல பொது கூட்டங்களில் பிரஸ்தாபிக்கப்பட்டுள்ளது.

அந்த நேரத்தில் எமது தலைமைகள் இவர்களை உள்வாங்காமல் இருந்ததிற்கும் நியாயமான காரணம் இருந்தது என்பதனை நான் நம்புகின்றேன்.

ஆனால் 2009 ஆம் ஆண்டிற்கு பின்னர் இன்று வரை இவர்களை எமது அரசியல் நீரோட்டத்தில் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் பிரச்சாரத்தில் இருப்பது விடுதலை புலிகளின் தியாகங்களும்,வீரச் செயல்களும்.

எனவே அவர்களை தமிழ் தேசியக்கூட்டமைப்பில் இணைத்துக் கொள்ள வேண்டும் என்பது கட்டாயமானது.எனவே வடக்கு கிழக்கில் உள்ள 8 மாவட்டங்களிலும் முன்னாள் போராளிகளை முன்னுரிமை அடிப்படையில் அவர்களை உள்வாங்குங்கள். என அவர் கோரிக்கை விடுத்துள்ளார் .