இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி மேலும் நால்வர் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க தெரிவித்தார்.
அதற்கமைய தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 185 இலிருந்து 189 ஆக உயர்வடைந்துள்ளது.
இதேவேளை, நோயாளிகளில் இருவர் இன்று குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். அதற்கமைய இதுவரை 44 பேர் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர்.
நோயாளர்களில் 7 பேர் உயிரிழந்துள்ள நிலையில் ஏனைய 138 பேரும் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.