இலங்கை மக்களுக்கு ஓர் அரிய வாய்ப்பு!

imagescaqssgfv1
imagescaqssgfv1

இலங்கை மக்களுக்கு விண்கல் மழை பொழிவை பார்ப்பதற்கான அரிய வகை சந்தர்ப்பம் ஒன்று ஏற்பட்டுள்ளதாக ஆத்தர் சீ க்ளார்க் மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

இன்று முதல் அதிகாலை நேரங்களில் இதனை அவதானிக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் 25ஆம் திகதி வரை விண்கல் மழை பொழிவை அதிகாலை நேரங்களில் பார்க்க வாய்ப்பு கிடைத்துள்ளதாக மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

நட்சத்திரங்கள் தொடர்பான வானியல் பேராசிரியர் சந்தன ஜயரத்ன இந்த தகவலை ஊடகங்களுக்கு வெளியிட்டுள்ளார்.