தற்போது காலி முதல் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற் பிராந்தியங்களில் காற்றின் வேகம் அதிகரித்து காணப்படும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.
வளிமண்டலவியல் திணைக்கலத்தினால் விடுத்துள்ள அறிக்கையினால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த கடற் பிராந்தியங்களில் காற்றின் வேகம் மணித்தியாலத்திற்கு 70 முதல் 80 கிலோமீற்றர் வேகத்தில் வீசும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன் குறித்த பகுதிகளில் அதிக மழைவீழ்ச்சி காணப்படும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதன் போது கடற்றொழில் நடவடிக்கையில் ஈடுபடுபவர்கள் அவதானமாக செயற்படுமாறும் எச்சரிக்கப்பட்டுள்ளது.