வர்த்தகர் ஒருவரிடம் இலஞ்சம் பெற்றுக்கொண்ட குற்றத்திற்காக யக்கல பொலிஸ் நிலைய குற்றவியல் பிரிவின் பொலிஸ் அதிகாரி கைது செய்யப்பட்டுள்ளார்.
கம்பஹா வத்துரகம பிரதேச வர்த்தகர் ஒருவருக்கு கம்பஹா நீதவான் நீதிமன்றத்தால் வழங்கப்பட்ட பிணை உத்தரவை இலகுபடுத்தி எதிர்வரும் நீதிமன்ற நடவடிக்கைகளில் ஒத்துழைப்பு வழங்குவதாக தெரிவித்து குறித்த பொலிஸ் அதிகாரி 15,000 ரூபாவை இலஞ்சமாக கோரியுள்ளார்.
இதற்கமைய கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டுக்கமைய இலஞ்ச ஊழல் விசாரணை பிரிவு அதிகாரிகள் குறித்த பொலிஸ் அதிகாரியை கைது செய்துள்ளனர்.
பொலிஸ் அதிகாரி கம்பஹா பண்டாரவத்த பகுதியில் குறித்த இலஞ்ச தொகையை பெற்றுக்கொண்ட போது இலஞ்ச ஊழல் விசாரணை பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.
சந்தேக நபரை கொழும்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி முன்னிலையில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.