நாளாந்தம் அதிகரிக்கும் வாழ்க்கைச் செலவுக்கு எதிராக, இன்றைய வியாழக்கிழமை (16) தினம் தேசிய மக்கள் சக்தியின் சார்பில் கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்று, திருகோணமலை நகரின் பஸ் நிலையத்துக்கு முன்பாக இடம்பெற்றது.
குறித்த கவனயீர்ப்பு போராட்டமானது சுகாதார நடை முறைகளை பின்பற்றி இடம்பெற்றதுடன் பல சுலோகங்களை ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுபட்டோர்கள் காணப்பட்டார்கள்.
எரிபொருள் விலையை குறை, மின்சார தண்ணீர் கட்டணங்களை தாங்க முடியாது உடன் நிவாரணம் வழங்கு, உள்ளிட்ட வாசகங்களுடன் போராட்டக்காரர்கள் இதன் போது அரசுக்கு எடுத்துக் காட்டியமை குறிப்பிடத்தக்கது