ஐக்கிய தேசியக் கட்சி தனியான ஒரு அரசாங்கத்தை உருவாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அமைச்சர் லக்ஷமன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.
கண்டியில் தேர்தல் கடமைகளுக்காக நியமிக்கப்பட்டுள்ள உத்தியோகத்தர்களுக்கு நியமனங்களை வழங்கும் நிகழ்வில் பங்கேற்று உரையாற்றும் போதே அவர் இதனை கூறினார்.
நல்லாட்சி அரசாங்கத்தை உருவாக்கியிருந்தாலும் அது ஐக்கிய தேசியக் கட்சியின் தனி அரசாங்கம் இல்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, மக்களுக்கு பல சலுகைகளை வழங்குவதாக தெரிவிக்கும் கோட்டாபய ராஜபக்ஷ, அதற்காக எவ்வாறு நிதியை பெற்றுக்கொள்ள போகின்றார் என்பதை தெளிவுப்படுத்த வேண்டும் என நிதி அமைச்சர் மங்கள சமரவீர கூறியுள்ளார்.
வெட் வரியை 8 வீதமாக குறைத்தால் நாடு பொருளாதார ரீதியாக பாரிய பின்னடைவை சந்திக்கும் எனவும் அவர் நேற்று (17) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் தெரிவித்துள்ளார்.