பஸில் ராஜபக்ச தேசியப்பட்டியல் ஊடாக நாடாளுமன்றத்துக்குச் செல்வதற்கான வாய்ப்புள்ளது

Basil Rajapaksa 1 1
Basil Rajapaksa 1 1

ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி கட்சியை உருவாக்கவும் அதனை வெற்றிப்பாதைக்குக் கொண்டு செல்லவும் முன்னெடுக்கப்பட்ட அனைத்து நடவடிக்கைகளின் பின்னாலும் இருந்து செயற்பட்ட பிரதான நபரும் முன்னாள் அமைச்சருமான பஸில் ராஜபக்ச தேசியப்பட்டியல் ஊடாக நாடாளுமன்றத்துக்குச் செல்வதற்கான வாய்ப்புகள் இருப்பதாக நம்பத்தகுந்த வட்டாரத் தகவல்கள் கூறுகின்றன.

இவர் இட்டைப் பிரஜாவுரிமையைக் கொண்டவர் என்பதனால் தேர்தலில் போட்டியிடவோ தேசியப்பட்டியலில் உள்வாங்கப்படவோ இல்லை. எப்படியிருப்பினும் விரைவில் அவர் இரட்டைப் பிரஜாவுரிமையை இல்லாது செய்யவுள்ளார் என்று தெரியவந்துள்ளது.

மேலும் இரட்டைப் பிரஜாவுரிமையை இல்லாது செய்யும் தருணத்தில் சட்டச் சிக்கல்கள் எதுவுமின்றி நாடாளுமன்றத்துக்குள் நுழைய முடியும். அதன்படி இவர் தேசியப் பட்டியல் ஊடாக நாடாளுமன்றத்துக்குச் செல்லவுள்ளார் எனவும், அவருக்காகத் தேசியப்பட்டியல் ஆசனத்தை வழங்குவதற்கு தற்போது தேசியப் பட்டியல் ஊடாக நாடாளுமன்றத்துக்குத் தெரிவாகியுள்ள ஒருவர் உள்ளார். அந்நபர் எவ்வேளையிலும் பதவி விலகத் தயாராக இருக்கின்றார் எனவும் அறிய முடிகிறது.