அரச செலவுகள் உள்ளடங்கிய இடைக்கால கணக்கறிக்கை மீது எதிர்வரும் 27, 28 ஆம் திகதிகளில் பாராளுமன்றத்தில் விவாதம் நடைபெறவுள்ளது.
சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் நேற்று (வியாழக்கிழமை) நடைபெற்ற முதலாவது கட்சி தலைவர்கள் கூட்டத்திலேயே இரு நாட்கள் விவாதம் நடத்துவதற்கு இணக்கம் காணப்பட்டது.
இடைக்கால கணக்கறிக்கையானது இன்று (21) சபையில் முன்வைக்கப்படவுள்ளது. பாராளுமன்றம் இன்று முற்பகல் 9.30 மணிக்கு சபாநாயகர் தலைமையில் கூடவுள்ளது.