இன்று (சனிக்கிழமை) அதிகாலை 4 மணியளவில் இடம்பெற்ற வாகன விபத்தில் 5 பேர் பலியாகியுள்ளனர்.
இவ் விபத்து கொழும்பு – குருநாகல் பிரதான வீதியின் சிலாபம் வலக்கும்புர பகுதியில் இடம்பெற்றுள்ளது.
டிப்பர் ரக வாகனம் ஒன்றும் கார் ஒன்றும் நேருக்கு நேர் மோதியதாலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. வலக்கும்புர பகுதியில் மரண வீடொன்றுக்கு சென்று குருநாகல் நோக்கி பயணித்த காரே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளதாக கூறப்படுகிறது.
காரில் பயணித்த ஐவருமே பலியாகியுள்ளனர் என தெரிவிக்கப்படுகிறது.