கொழும்பில் கைதாகிய பல்கலைக்கழக மாணவர்களுக்கு பிணை

sn2
sn2

கொழும்பு – கோட்டையில் கைது செய்யப்பட்ட பல்கலைக்கழக மாணவர்களில் 52 பேருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.

கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் மாணவர்கள் நேற்று ஆஜர்படுத்தப்பட்ட போது, பிணை வழங்கப்பட்டது.

தலா ஒரு இலட்சம் ரூபா சரீரப் பிணையில் மாணவர்கள் செல்வதற்கு நீதவான் அனுமதி வழங்கியுள்ளார்.

கொழும்பு கோட்டையில் பல்கலைக்கழக மாணவர்களால் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தை கலைக்கும் போது, 53 மாணவர்கள் கைது செய்யப்பட்டனர்.

பொதுமக்களுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் செயற்பட்டமையால் மாணவர்கள் 53 பேரும் கைது செய்யப்பட்டனர்.

51 மாணவர்களும் மாணவி ஒருவரும் தேரர் ஒருவரும் கைது செய்யப்பட்டிருந்தனர்.

கைது செய்யப்பட்ட 53 மாணவர்களில் ஒருவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் இன்று உத்தரவிட்டுள்ளார்.

குறித்த மாணவர் தொடர்பில் மற்றுமொரு வழக்கு நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளமையால் அவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.