இலங்கை பாராளுமன்றத்தின் சபாநாயகர் கருஜயசூரிய ஜனநாயகம் மற்றும் நேர்மையான பொது மக்கள் சேவைக்கான அர்ப்பணிப்பை மேற்கொண்ட தெற்காசிய இராய தந்திரியாக கௌரவிக்கப்பட்டுள்ளார்.
ஐக்கிய நாடுகள் சபையில் ஆசிய நட்புறவு அமைப்பின் 20வது வருடாந்த நிறைவை முன்னிட்டு இந்த கௌரவ விருது சபாநாயகருக்கு வழங்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் சன்சாட் அமைப்பின் பொதுச் செயலாளர் கலாநிதி அனில்கே சிங், அமெரிக்காவின் பெவர்லி ஹில்லின் மனைவியான திருமதி முனி இரோனி உள்ளிட்ட வெளிநாட்டு இராயதந்திரிகள் தலைமையில் இந்த விருது வழங்கும் நிகழ்வு இடம்பெற்றது.