சுகயீனம் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவர் ஒருவர் உயிரழந்துள்ளார். புவியியல் அறிவியல் பீடத்தின் இரண்டாம் ஆண்டு கல்வியாண்டில் பயிலும் குறித்த மாணவர் நேற்று திடீரென சோர்வுற்ற நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மேற்படி மாணவர் பலாங்கொடை ஆரம்ப வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார். இதன் பின் சிகிச்சை பலனின்றி இவர் உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.