இந்தியாவில் திருவள்ளுவர் சிலை சேதப்படுத்தப்பட்ட நிலையில் குறித்த சிலை மீண்டும் புதுப்பிக்கப்பட்டு பல கட்சி தலைவர்களினாலும் நேரில் சென்று திருவள்ளுவர் சிலைக்கு மரியாதை செலுத்தப்பட்டு வருகின்றது.
இந்நிலையில் சிலை சேதப்படுத்தப்பட்டமை தொடர்பில் பல அரசியல் கட்சி தலைவர்களும் தமது கண்டனத்தை தெரிவித்திருந்தனர்.
இதனிடையே திருவள்ளுவர் இந்து மதத்தை சேர்ந்தவர் என்ற கருத்து பரவலான விவாதங்களை ஏற்படுத்தி உள்ளது.
திருவள்ளுவர் சிலையை வைத்து அரசியல் செய்வது கண்டனத்திற்குரியது என தே.மு.தி.க பொதுச்செயலாளர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்
திருவள்ளுவரை வைத்து அரசியல் செய்வதை தவிர்க்க வேண்டும். அதோடு தமிழுக்கும், தமிழர்களுக்கும் பொதுவான திருவள்ளுவரை வைத்து அரசியல் செய்வது கண்டிக்கத்தக்கது. இந்த விவகாரத்தில் தமிழக அரசு உடனடியாக கவனம் செலுத்தி, இதுபோன்ற நிகழ்வுகள் மேலும் தொடராமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளார்.