கன்னட சினிமாவில் கடந்த யூன் 7ம் திகதி ஒரு சோகமான சம்பவம் நடந்தது. முன்னணி நடிகரான சிரஞ்சீவி சர்ஜா திடீரென மாரடைப்பால் சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்தார்.
அவர் இறக்கும் போது அவரது மனைவியும், நடிகையுமான மேக்னா 3 மாதம் கர்ப்பமாக இருந்துள்ளார்.
அண்மையில் அவருக்கு சீமந்தம் எல்லாம் மிகவும் பெரிதாக நடந்தது. சிரஞ்சீவியின் தம்பி வரப்போகும் குழந்தைக்காக ரூ. 10 லட்சம் மதிப்புள்ள தொட்டில் எல்லாம் வாங்கினார்.
இந்த நிலையில் மேக்னாவிற்கு இன்று காலை ஆண் குழந்தை பிறந்துள்ளது. இதனால் குடும்பம் சந்தோஷத்தில் இருந்தாலும் சிரஞ்சீவி இல்லையே என வருத்தத்தில் உள்ளனர்.