2023ஆம் ஆண்டுக்கான ஆண்களுக்கான உலகக் கிண்ண ஹொக்கி தொடர் இந்தியாவில் நடைபெறவுள்ளதாக சர்வதேச ஹொக்கி சம்மேளனம் அறிவித்துள்ளது.
இதற்கமைய எதிர்வரும் 2023ஆம் ஆண்டு ஜனவரி 13ஆம் திகதி முதல் 29ஆம் திகதி வரை ஆண்டுக்கான உலகக் கிண்ண ஹொக்கி தொடர் இந்தியாவில் நடைபெறவுள்ளது.
இதற்கு முன்னர் நான்கு தடவைகள் இந்தியாவில் ஆண்களுக்கான உலகக் கிண்ணப் ஹொக்கி போட்டிகள் நடத்தப்பட்டுள்ளன.
உலகக் கிண்ணப் போட்டியை நடத்துவதற்கான போட்டியில் இந்தியா, பெல்ஜீயம், மலேசியா ஆகிய நாடுகள் பங்கு கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
1975 ம் ஆண்டு இந்தியா ஹொக்கி உலகக்கிண்ணத்தினை கைப்பற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.