கமல் ஹாசனை சோகத்தில் ஆழ்த்திய மரணம்!

bbkamal041020 1
bbkamal041020 1

பிக்பொஸ் நிகழ்ச்சியின் சீசன் 4 ஐ இவ்வருடமும் உலக நாயகன் கமல் ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார். தொடர்ந்து அவர் இந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவது 4 வது முறை.

வழக்கும் போல அவரின் அரசியல் பேச்சும் அவ்வபோது வார இறுதி மேடைகளில் இடம் பெறும். இந்தியன் 2 பட வேலைகள் இருக்க அவர் அரசியல், கட்சி பணிகளில் துரிதமாக செயல்பட்டு வருகிறார்.

புத்தகம் படிப்பதிலும், அந்த புத்தகத்தின் முக்கியத்துவதை ஒவ்வொரு வாரமும் புதிய புத்தகத்தை ரசிகர்களுக்கு பிக்பொஸ் மேடையில் அறிமுகப்படுத்தி வருகிறார்.

இந்நிலையில் தமிழுக்காக பணியாற்றிய தமிழறிஞர் ராம.இருசுப்பிள்ளையின் மரணம் சோகத்தில் ஆழ்த்தியுள்ளதாகவும் அவரின் மரணத்திற்கு இரங்கல் தெரிவித்து கமல் டுவிட்டரில் இவ்வாறு பதிவிட்டுள்ளார்.

திருவாசகச் சொல்லகராதி, திருக்கோவையார் சொல்லகராதி உள்ளிட்ட இருபதிற்கும் மேற்பட்ட தமிழ் நூல்களை எழுதிய தமிழறிஞர் இராம. இருசுப்பிள்ளை காலமான செய்தி அறிந்தேன். தமிழ் முனிவராக வாழ்ந்து தமிழ்ப் பணியாற்றிய இருசுப்பிள்ளையின் பெயர் வரலாற்றில் நிலைக்கட்டும்.