நடிகர் சங்க கட்டடம் : சிரஞ்சீவிக்கு பாலகிருஷ்ணா கேள்வி

i3 23
i3 23

தெலுங்கு திரையுலகில் நடிப்பில் இருதுருவ நட்சத்திரங்களாக வலம் வரும் சிரஞ்சீவியும் பாலகிருஷ்ணாவும் நடிப்பில் மட்டுமல்ல, அதை தாண்டியும் எதிர் எதிர் துருவங்களாகவே இருக்கின்றனர். சமீபத்தில் இணையதளம் ஒன்றுக்கு பேட்டி அளித்த பாலகிருஷ்ணா, சிரஞ்சீவி பற்றி கடுமையாக விமர்சித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது : “தெலுங்கு திரையுலகில் பாசாங்குத்தனம் ஒருபக்கமாக சாய்வதும் அதிகமாகிவிட்டது. தெலுங்கு திரைப்பட நடிகர் சங்கத்தில் 5 கோடி ரூபாய் மதிப்புள்ள கட்டடம் கட்ட நிதி திரட்டுகிறோம் என்பதற்காக கடந்த வருடம் சிரஞ்சீவி தலைமையில் பலர் அமெரிக்காவுக்கு சென்றார்களே, என்ன ஆச்சு..? என்னைக்கூட அழைக்காமல் தானே அமெரிக்காவுக்கு சென்றார்கள்.. நிதி திரட்டி வந்தார்களா..? அதற்குப்பின் அதுபற்றிய பேச்சையே காணோம்… தற்போது அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தும் எந்த ஒரு கூட்டங்களுக்கும் என்னை அழைப்பதில்லை.. அரசியலை சினிமாவுடன் கலப்பது நல்லதல்ல” என்று காட்டமாக கேள்விகளை எழுப்பியுள்ளார் பாலகிருஷ்ணா.