சூரரைப் போற்று : யாருக்கும் எந்த தடையும் இல்லை!

i3 24 1
i3 24 1

‘என் மனதுக்கு மிகவும் நெருக்கமான படம்’, என சூர்யாவே சொன்ன படம் சூரரைப் போற்று. இந்த படத்தின் ரிலீசை எதிர்பார்த்து, ரசிகர்கள் மட்டுமின்றி அவரும் தான் காத்திருக்கிறார். சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தின் மீது அத்தனை நம்பிக்கை சூர்யாவுக்கு.

பொன்மகள் வந்தாள் ஓடிடியில் ரிலீஸ் செய்யப்பட்டதால் திரையரங்கு உரிமையாளர்கள் சூர்யா மீது கடும் கோபத்தில் இருக்கிறார்கள்.

இது சூரரைப் போற்று வெளியீட்டில் நிச்சயம் எதிரொலிக்கும் என கோலிவுட் வட்டாரங்கள் எதிர்பார்க்கின்றன.

ஆனால் சூர்யாவோ சூரரைப் போற்று நிச்சயம் தியேட்டரில் தான் ரிலீசாகும் என திட்டவட்டமாக கூறியிருக்கிறார்.

நடிப்பு மட்டுமின்றி, தயாரிப்பு, விநியோகம் என மற்ற பணிகளையும் செய்து வரும் சூர்யாவுக்கு, சூரரைப் போற்று படத்தை தியேட்டரில் ரிலீஸ் செய்வது ஒன்றும் பெரிய பிரச்சினையாக இருக்காது என்கின்றனர் விவரம் அறிந்தவர்கள்.

அதை உண்மையாக்கும் வகையில் தியேட்டர் ரிலீசுக்கான அடுத்தடுத்த பணிகளை செய்து வருகிறது சூரரைப் போற்று படக்குழு. இத்தனை பிரச்சினைக்கு மத்தியிலும் சத்தமில்லாமல் சென்சார் சான்றிதழ் வாங்கிவிட்டார்கள்.

சூரரைப் போற்று படத்தை பார்த்த சென்சார் அதிகாரிகள், சூர்யாவையும், சுதா கொங்கராவையும் வெகுவாக பாராட்டியிருக்கிறார்கள். படத்துக்கு எந்த வெட்டும் இல்லாமல் யூ சான்று கொடுத்துவிட்டார்கள். எனவே எந்த தடையும் இல்லாமல் சிறுவர் முதல் பெரியவர் வரை யார் வேண்டுமானாலும் படத்தை பார்க்கலாம்.

சூரரைப் போற்று படத்திற்கு யூ சான்றிதழ் கிடைத்திருப்பதால் சூர்யா ரசிகர்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். படத்தை தியேட்டரில் பார்க்க அவர்கள் தயாராகி வருகிறார்கள்.