5 ஆண்டுகளாக மன அழுத்தத்தில் தவிக்கும் பாயல் கோஷ்

i3 26 1
i3 26 1

தமிழில் தேரோடும் வீதியிலே என்ற படத்தில் நடித்தவர் பாயல் கோஷ். தெலுங்கு, கன்னடம், இந்தி மொழிகளில் ஏராளமாள படங்களில் நடித்துள்ளார். இவர் கடந்த 5 ஆண்டுகளாக மன அழுத்தத்தில் இருப்பதாகவும், அதற்கான சிகிச்சை பெற்று வருவதாகவும் தனது இன்ஸ்டாகிராம் பதிவில் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் மேலும் கூறியிருப்பதாவது: 2015-ம் ஆண்டு முதல் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளேன். அதற்காக மருந்துகளை சாப்பிட்டு வருகிறேன். எனக்கும் மரண பயம் இருக்கிறது என்பதை அவ்வப்போது உணர்கிறேன். சில சமயம் செத்து விட்டதாக கூட உணர்வேன். அந்த சமயத்தில் மருத்துவமனைக்கு விரைந்து செல்வேன். இதுபோன்ற சூழ்நிலையில் எனக்கு எனது குடும்பம், நண்பர்கள் அருகில் இருந்து என்னைக் காப்பாற்றினார்கள்.

சமூக வலைத்தளங்களில் நண்பர்களுடன் உரையாடி ரிலாக்ஸ் செய்து கொள்கிறேன். இந்த நேரத்தில் சுஷாந்தின் மரணம் என்னை இன்னும் அதிகம் பாதித்திருக்கிறது. நண்பர்கள், உறவினர்கள் அருகிலேயே இருப்பதால் தான் நான் உயிரோடு இருக்கிறேன். அவர்களுக்கு நன்றி. இவ்வாறு பாயல் கூறியிருக்கிறார்.