குழந்தைகளைப் பாதுகாப்பாக வைத்திருப்பது பெற்றோர் பொறுப்பாகும்:தீபால் பெரேரா

vikatan 2019 05 1b6c96bd 0632 44ff 8803 f13946e0ec2b 107762 thumb
vikatan 2019 05 1b6c96bd 0632 44ff 8803 f13946e0ec2b 107762 thumb

எந்த அறிகுறகளையும் காட்டாவிட்டாலும் கொரோனா வைரஸ் பரவுவதற்கான வாய்ப்பு உள்ளதாக குழந்தை மருத்துவ விசேட நிபுணர் மருத்துவர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாக கொரோனா தொற்று ஏற்படுவதற்கு அதிகளவான வாய்ப்பு உள்ள குழந்தைகளை மிகவும் அக்கறையுடன் கவனித்துக்கொள்ள வேண்டியது ஒவ்வொரு தாய்மார்களினதும் கடமையாகும் எனவும் அவர் இதன்போது சுட்டிக்காட்டினார்.

மேலும், அரசாங்கம் தற்போது மேற்கொண்டுள்ள நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்கும் அதேநேரம், குழந்தைகளை வீடுகளில் வைத்திருத்தல், அவர்களுக்கு பொழுதுபோக்கு அம்சங்களில் நேரத்தை செலவிடுவது உள்ளிட்ட மன அழுத்தத்தை குறைக்கும் வகையிலான செயற்பாடுகளில் பெற்றோர் கவனம் செலுத்த வேண்டுமெனவும் அவர் குறிப்பிட்டார்.