ஆயிரம் ரூபாய் தொடர்பான பேச்சுவார்த்தை சற்று வித்தியாசமாக எதிர்காலத்தில் முன்னெடுக்கப்படும்; ஜீவன்

DSC03837
DSC03837

தொழிலாளர்களுக்கான ஆயிரம் ரூபாய் சம்பள விடயம் தொழிற்சங்க ரீதியாக முன்னெடுக்கப்படவுள்ளது.
அதேநேரத்தில் இது தொடர்பாக நாட்டின் பிரதமருடைய கவனத்திற்கும் ஏற்கனவே கொண்டு வரப்பட்டுள்ளது ஆயிரம் ரூபாய் தொடர்பான பேச்சுவார்த்தை சற்று வித்தியாசமாக எதிர்காலத்தில் முன்னெடுக்கப்படும் என ராஜாங்க அமைச்சரும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்தார்.

கொழும்பு கொள்ளுபிட்டியில் அமைந்துள்ள தோட்ட வீடமைப்பு மற்றும் சமூதாய உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சில் இன்று (14) காலை கடமைகளை பொறுப்பேற்ற பின்னர் உரையாற்றிய போது அவர் இவ்வாறு கூறினார்.

அங்கு தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில் தோட்ட மக்களுக்கும் ஏனைய மக்களுக்கும் வேலை செய்யக்கூடிய நல்ல அமைச்சு ஒன்று இன்று எனக்கு கிடைத்திருக்கிறது. இந்த அமைச்சின் மூலம் எம் மீது நம்பிக்கை வைத்த தோட்ட மக்களுக்கும் அனைத்து இன மக்களுக்கும் நல்லதொரு எதிர்காலத்தினை உருவாக்குவேன் என குறிப்பிட்டார்.

இந்த சந்தர்ப்பத்தில் ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் நன்றி கூற வேண்டும். என் மீது நம்பிக்கை வைத்து எனது தந்தையின் அமைச்சினை எனக்கு வழங்கியதற்காக. அத்தோடு இந்த நேரத்தில் எனக்கு வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவிக்கவும் கடமை பட்டுள்ளேன் என அவர் மேலும் தெரிவித்தார்.