வன்னித் தேர்தல் தொகுதியில் போட்டியிட்ட ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் வேட்பாளர் குலசிங்கம் திலீபன் நடைபெற்று முடிந்த பாராளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று நாடாளுமன்றத்திற்கு தெரிவாகியுள்ளார்.
ஈழமக்கள் ஜனநாயக கட்சி 11118 வாக்குகளைப் பெற்றுள்ளது. இதில் குலசிங்கம் திலீபன் 3203 விருப்பு வாக்குக்களைப் பெற்று ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் சார்பில் முதல் முறையாக புதிய உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
அதனை முன்னிட்டு அவரின் வீட்டின் முன் பகுதியில் கட்சி ஆதரவாளர்களினால் பட்டாசு கொழுத்தி மகிழ்ச்சிக் கொண்டாட்டத்தில் ஈடுபட்டமையும் குறிப்பிடத்தக்கது