தமிழில் தேசிய கீதம் இசைக்க தடை தகவலில் உண்மையில்லை!

5 Man
5 Man

தேசிய கீதத்தினை சிங்கள மொழியில் மாத்திரமே இசைக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உத்தரவு பிறப்பித்துள்ளதாக வெளியான தகவல்களில் உண்மையில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கையின் தேசிய கீதம் இனிவரும் காலங்களில் சிங்கள மொழியில் மாத்திரமே இசைக்கப்பட வேண்டும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உத்தரவு பிறப்பித்துள்ளதாக தகவல்கள் வெளியாகிருந்தன.

எனினும் குறித்த தகவல்களில் உண்மை இல்லை என நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

தனது முகப்புத்தகத்தில் பதிவிட்டுள்ள பதிவு ஒன்றின் ஊடாகவே நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் இந்த தகவலினை வெளியிட்டுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள பதிவில், ‘புதிய ஜனாதிபதி தமிழில் தேசிய கீதம் பாடுவதை தடை செய்து எந்தவொரு பணிப்புரையும் விடுக்கவில்லை என வாசுதேவ நாணயக்கார எம்பி என்னிடம், ‘என்ன இது, வாசு?’ என சற்றுமுன் அவரிடம் நான் கேட்ட போது தெரிவித்தார்.’ எனக் குறிப்பிட்டுள்ளார்.