மின்கட்டணப் பட்டியலை, பயனாளர்களுக்கு குறுந்தகவல் அல்லது மின்னஞ்சல் ஊடாக வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதன்படி, புதிய தொழிநுட்பத்தைப் பயன்படுத்தி ஸ்மார்ட் மீட்டர்பொருத்தப்படவுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது
இதற்கமைய, குறித்த திட்டத்தின் ஊடாக அலுவலகத்திலிருந்தே மின்கட்டணங்களை தயாரிக்க முடியும் எனவும், மானி வாசிப்பாளரின் உதவி தேவையில்லை எனவும், இராஜாங்க அமைச்சர் துமிந்த திஸாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.
எனினும், இந்தத் திட்டத்தன் ஊடாக மானிவாசிப்பாளரின் தொழில் இழக்கப்பட மாட்டாது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்த நிலையில், ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தை அடுத்த வருடம் முதல் நடைமுறைப்படுத்த எதிர்பார்ப்பதாக, இராஜாங்க அமைச்சர் துமிந்த திஸாநாயக்க மேலும் குறிப்பிட்டுள்ளார்.