கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்ட நிலையில் தப்பிச்சென்ற நபர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.
காவல்துறை ஊடகப்பேச்சாளர் பிரதி காவல்துறை மா அதிபர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
இதன்படி, குறித்த நபரை சபுகஸ்கந்த காவல்துறை பிரிவுக்குட்பட்ட மாகொல பிரதேசத்திலுள்ள தேவால வீதியிலுள்ள வீடொன்றில் வைத்து குறித்த நபர் கண்டுபிடிக்கப்பட்டதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.