தேசிய சேமிப்பு வங்கியின் கியு ஆர் பயன்பாட்டை அறிமுகப்படுத்தும் ஆரம்ப நிகழ்வு வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெலவின் தலைமையில் கடந்த 20 ஆம் திகதி கண்டியில் இடம்பெற்றது.
இணையத்துடன் தொடர்புடைய ஸ்மார்ட் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி டிஜிட்டல் தொழில்நுட்பத்தினூடாக இணையவழி பணப்பரிமாற்றத்திற்கு மக்களை ஊக்குவிப்பதே இதன் நோக்கமாகும்.
கியு ஆர் முறையை அறிமுகப்படுத்துவதில் முன்னின்று செயல்பட்ட தேசிய சேமிப்பு வங்கியின் தலைவி கேசலா ஜயவர்தனவுக்கு இதன் போது அமைச்சரினால் விருது வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.