எமக்கான உரிமைகள் தொடர்தும் மறுக்கப்பட்டு வருவதுடன் உரிமைக்காக ஏதோ ஒரு வடிவில் நாம் போராடிக்கொண்டே இருக்கின்றோம்-சாள்ஸ்

saalsh
saalsh

இன்று உலகையே உலுக்கிக்கொண்டு இருக்கும் கொவிட் -19 தாக்கத்தின் காரணமாக பலர் தொழில் வாய்ப்புக்களை இழந்து பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுக் கொண்டு இருக்கும் இந்த சூழ்நிலையில் 2021 மே தினம் எம்மை கடந்து செல்கின்றது. என நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் குறிப்பிட்டார்.

தமிழர் தேசத்தை பொறுத்தவரை விவசாயம் மற்றும் கடற்தொழில் செய்கைகள் பாதிக்கப்பட்டுள்ளது.கடற்தொழிலை பொறுத்தவரை இந்திய றோலர் வருகையினால் எமது மீனவர்களின் வாழ்வாதாரம் நாளாந்தம் பாதிக்கப்படுக்கொண்டு வருகின்றது.அரசாங்கத்தின் தவறான கொள்கையால் பல உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவுகின்றது.மக்களின் வாழ்கைச்செலவு அதிகரித்து செல்கின்றது.

யுத்த காலத்தில் இருந்ததை விட இறுக்கமான சூழ்நிலையில் இங்குள்ள மக்கள் நின்மதியற்ற வாழ்கையை வாழ்ந்து வருகின்றனர். தொழிலாளர்களுக்கான உரிமைகள் தொடர்ந்தும் மறுக்கப்பட்டே வருகின்ற அதே நேரம் தமிழ் மக்களின் உரிமைக்கான போராட்டம் தொடர்கின்றது. பயங்கரவாத தடைச்சட்டத்தின் காரணமாக பல ஆண்டுகளாக பலர் இன்றும் சிறைகளில் வாழ்ந்துவருவதுடன் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் போராட்டம் வீதிகளில் தொடர்ந்த வண்ணமே உள்ளது.எமக்கான உரிமைகள் தொடர்தும் மறுக்கப்பட்டே வருவதுடன் எமது உரிமைக்காக ஏதோ ஒரு வடிவில் நாம் தொடர்ந்தும் போராடிக்கொண்டே இருக்கின்றோம்.என்றார்.