கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 48 பேர் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு விடுத்துள்ள நாளாந்த புதுப்பிக்கப்பட்ட அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேற்குறித்த 48 பேரும் வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்பியவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, இன்று அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 1891ஆக அதிகரித்துள்ளது.
நாட்டில் ஒரே நாளில் பதிவான அதிகூடிய கொரோனா தொற்றாளர் எண்ணிக்கை இதுவாகும்.
அத்துடன், நாட்டில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 111,753 ஆக உயர்வடைந்துள்ளது.