மீண்டும் முடங்குகின்றது இலங்கை!

21 609335583bc7f
21 609335583bc7f

இலங்கையில் கொரோனா பரவல் தீவிரமடைந்துள்ள நிலையில், எதிர்வரும் 21ஆம் திகதி முதல் மீண்டும் நாடு தழுவிய பயணக் கட்டுப்பாடு விதிக்கப்படும் என்று கொரோனாத் தடுப்புக்கான தேசிய செயற்பாட்டு மையத்தின் தலைவரும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் சவேந்திர சில்வா நேற்று அறிவித்தார்.

முதற்கட்டமாக இம்மாதம் 21ஆம் திகதி வெள்ளிக்கிழமை இரவு 11 மணி முதல் 25 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை அதிகாலை 4 மணி வரையில் நாடு பூராகவும் முழுநேரப் பயணக்கட்டுப்பாடு விதிக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

இரண்டாம் கட்டமாக, 25 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை இரவு 11 மணி முதல் 28ஆம் திகதி வெள்ளிக்கிழமை அதிகாலை 4 மணி வரையிலும் நாடு பூராகவும் முழுநேரப் பயணக் கட்டுப்பாடு விதிக்கப்படும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

இதேவேளை, இரவு 11 மணி முதல் அதிகாலை 4 மணி வரை அமுலில் உள்ள பயணக் கட்டுப்பாடும், மாகாணங்களுக்கு இடையிலான பயணக் கட்டுப்பாடும் இம்மாதம் 31 ஆம் திகதி வரை தொடர்ந்தும் அமுலில் இருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.