மட்டக்களப்பில் கர்ப்பிணி தாயார் இருவர் உட்பட 66 பேருக்கு கொரோனா!

Coronamedicine 1583822800908 2 1
Coronamedicine 1583822800908 2 1

மட்டக்களப்பு மாவட்டத்தில் கர்ப்பிணிதாயார் இருவாரும் சுகாதார உத்தியோகத்தர் ஒருவர் உட்பட 66 பேருக்கு கொரோனா தொற்று உறுதி. இன்று திங்கட்கிழமை (17) மாலை 6 மணிவரையில் கண்டறியப்பட்டுள்ளதாகவும் சின்ன ஊறணி, திருச்செந்தூர், கல்லடி வேலூர் கிராமசேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டு முடக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் நா.மயூரன் தெரிவித்தார்.

மட்டக்களப்பு , ஏறாவூர், காத்தான்குடி, வாழைச்சேனை, ஆரையம்பதி, களுவாஞ்சிக்குடி, போன்ற சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளில் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வந்த அன்டிஜன் மற்றும் பி சி ஆர் பரிசோதனைகளின் படி நேற்று ஞாயிற்றுக்கிழமை காலை 6 மணி தொடக்கம் திங்கட்கிழமை மாலை 6 மணிவரை இரு கர்ப்பணி தாய்மார்கள் ஒரு சுகாதார வைத்திய அதிகாரி உட்பட 66 பேருக்கு தொற்று உறுதி கண்டறியப்பட்டதையடுத்து கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை மாவட்டத்தில் 1502 பேராக உயர்ந்துள்ளதுடன் இதுவரை 19 மரணங்கள் இடம்பெற்றுள்ளதுடன் 3 வது கொரோனா அலையில் 10 பேர் மரணமடைந்துள்ளதாகவும் மாவட்டத்தில் உள்ள 14 சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிலும் கொரோனா தொற்று நோயாளர்கள் கண்டறியப்பட்டுள்ளதுடன் நாளாந்தம் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து செல்வதாகவும் அவர் தெரிவித்தார்