நம்பிக்கையில்லாத் தீர்மானம் குறித்து நான் அச்சப்படவில்லை – உதய கம்மன்பில

uthaya kampanpila
uthaya kampanpila

எரிபொருள் விலை அதிகரிப்பு தொடர்பாக எதிர்க்கட்சி கொண்டுவரும் நம்பிக்கையில்லாத் தீர்மானம் குறித்து அச்சப்படவில்லை என அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்தார்.

நேற்று (11) நடைபெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்த அவர், நம்பிக்கையில்லாத் தீர்மானத்தைத் தொடர்ந்து வரக்கூடிய விளைவுகள் தொடர்பில் பயப்படவில்லை என கூறினார்.

இதேவேளை எந்தவொரு அமைச்சையும் மாற்ற ஜனாதிபதிக்கு உரிமை உண்டு என்று உதய கம்மன்பில கூறினார்.

எதிர்க்கட்சியால் தாக்கல் செய்யப்பட்ட நம்பிக்கையில்லாத் தீர்மானம் குறித்து யூலை 19 மற்றும் 20 ஆம் திகதிகளில் நாடாளுமன்ற விவாதம் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.