ரணில் அரசாங்கத்திற்கு வக்காலத்து வாங்குகின்றார் – சரத் பொன்சேகா

Sarath Fonseka
Sarath Fonseka

ரணில் எமது கட்சியின் பயணத்தை தடுக்க எமது காலை வாரவேண்டாம் என எதிர்க்கட்சி உறுப்பினர் சரத் பொன்சேகா சபையில் தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் நேற்று வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பில மீதான நம்பிக்கையில்லா பிரேரணையின் விவாதத்தில் உரையாற்றுகையில் அவர் இதனை கூறினார்.

அவர் மேலும் கூறுகையில்,

ரணில் விக்கிரமசிங்கவின் அரசியல் வரலாறு காலகாலமும் இவ்வாறே அமைந்துள்ளது.தனது கட்சிக்குள் இருக்கும் நபர்களில் காலை வாரும் செயற்பாடுகளையும், தலையை தடவி குட்டுவதுமே செய்து வருகின்றார்.

ரணில் விக்கிரமசிங்க அரசாங்கத்திற்கு வக்காலத்து வாங்குகின்றார். ரணில் விக்கிரமசிங்கவிற்கு வேண்டுமானால் தனியாக நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டுவந்து அவருக்கு தேவையான திருத்தங்களை உள்வாங்கிக்கொண்டு செயற்படலாம், ஆனால் எமது கட்சியின் பயணத்தை தடுக்க எமது காலை வாரவேண்டாம் என தெரிவித்துள்ளார்.